JUDAS
முந்நூறு பணமும், முப்பது
வெள்ளிக்காசுகளும்
வேதாகமத்தில் மத்தேயு 26, யோவான் 12, மாற்கு 14-ஆம் அதிகாரங்களில் இரண்டு எதிர்மறையான நிகழ்வுகளைக் குறித்தும், இரண்டு எதிர்மறையான நபர்களைக் குறித்தும் வாசிக்கின்றோம்.
2.
நிகழ்வு 2: யூதாஸ்காரியோத்து
பிரதான ஆசாரியரிடத்திற்குப் போய், 'நான் இயேசுகிறிஸ்துவை உங்களுக்குக் காட்டிக் கொடுக்கிறேன்.
நீங்கள் எனக்கு என்ன கொடுக்கிறீர்கள்?'' எனக் கேட்கிறான். முப்பது வெள்ளிக்காசு
கிரயமாகக் கொடுக்க உடன்படுகின்றனர் (மத் 26 :14,15 / மாற்கு 14: 43-45 / யோவான் 12:4)
பாவியாகிய ஸ்திரீ என்று லூக்கா 7:37-ல் வாசிக்கிறோம். இயேசுகிறிஸ்துவுக்கு முக்கியத்துவம் தந்ததால் மாற்கு 14-ஆம் அதிகாரத்தில் முகவரியில்லாத ஸ்திரீயின் பெயர் வேதாகமத்தில் வெளிப்பட்டது. விலையேறப்பெற்ற 'நளதம்' என்னும் தைலத்தை இயேசுகிறிஸ்துவின் பாதங்களில் பூசி, தன் தலைமுடியால் அவருடைய பாதங்களைத் துடைத்த ஸ்திரீயின் பெயர் ‘மரியாள்' என்று (யோவான் 12:3) வாசிக்கிறோம்.
மேலும் "இந்த சுவிசேஷம் உலகத்தில் எங்கெங்கே பிரசிங்கிக்கப்படுமோ அங்கங்கே இவளை நினைப்பதற்காக பாவியாகிய ஸ்திரீ (லூக்கா 7:37-ல்) இவள் செய்ததும் சொல்லப்படும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்" என்றார். (மாற்கு 14:9).
இதன் மூலம், (GOD is
greater than MONEY) என்று மரியாளைப்
போல வாழ்பவர்கள் நித்திய மகிமையும், கீர்த்தியும்
அடைவதை வேதம் சொல்லுகிறது
யூதாஸ்காரியோத்து முப்பது வெள்ளிக்காசை தேவாலயத்தில் எறிந்து விட்டு நான்றுகொண்டு செத்தான். (மத் 27:5) அநீதத்தின் கூலியினால் யூதாஸ்காரியோத்து ஒரு நிலத்தைச் சம்பாதித்து , தலைகீழாக விழுந்தான்; அவன் வயிறுவெடித்து, குடல்கள் சரிந்து போனது (அப் 1: 18) குறித்து வாசிக்கின்றோம்.
பிரதான ஆசாரியரோ அந்த முப்பது வெள்ளிக்காசை எடுத்து, அது இரத்தக்கிரயமானதால், காணிக்கைப் பெட்டியிலேப் போடாமல், அந்நியரை அடக்கம் செய்வதற்கு குயவனுடைய நிலத்தை அதினாலே கொண்டார்கள். இதனால் அந்த நிலம் இந்நாள்வரைக்கும் “இரத்தநிலம்” என்றே அழைக்கப்படுகிறது, (மத் 27:3-8).
அந்த நிலம் “இரத்தநிலம் (அக்கெல்தமா)” என்று வேதம் சொல்லுகிறது (அப் 1: 19). சங்கீத புத்தகத்தில் “யூதாஸ்காரியோத்தின் வாசஸ்தலம் பாழாகக்கடவது; ஒருவனும் அதில் வாசம்பண்ணாதிருப்பானாக என்றும்; அவனுடைய கண்காணிப்பை வேறொருவன் பெறக்கடவன்” என்றும் எழுதியிருக்கிறது (அப் 1: 20).
நிஜவாழ்க்கையில் கூட உழைத்து சம்பாதிக்காமல், குறுக்கு வழியில் ஈட்டிய பணத்தை தங்கள் வாழ்நாள் முழுவதும் அனுபவிக்க முடியாமல் போன பெரும் பணக்காரர்களையும், ஊழல் செய்து சுருட்டிய பணத்தை தங்கள் வாழ்நாள் முழுவதும் அனுபவிக்க முடியாமல் போன அரசியல்வாதிகளையும், கையூட்டாக பெற்ற பணத்தை தங்கள் வாழ்நாள் முழுவதும் அனுபவிக்க முடியாமல் போன அரசு அதிகாரிகளையும் நாம் பார்க்கிறோம். பின்னர், அவர்கட்கு சம்பந்தமில்லாத யார்யாரோ அந்த சொத்தை அனுபவிப்பதையும் நாம் காண முடியும்.
பரிசுத்த வேதாகமத்தில்
· நிலையற்ற ஐசுவரியத்தின் மேல் நம்பிக்கை
வையாமலும்,......சம்பூரணமாய்க் கொடுக்கிற ஜீவனுள்ள தேவன் மேல் நம்பிக்கை
வைக்கவும், (1 தீமோ 6:17)
·
தன் ஐசுவரியத்தை நம்புகிறவன் விழுவான் (நீதி 11:28)
·
தன் ஐசுவரியத்தைக் குறித்து மேன்மை பாராட்ட
வேண்டாம் (எரே 9:23)
என்று
வாசிக்கிறோம்.
"உன் பொருளாலும், உன் எல்லா விளைவின் முதற்பலனாலும், கர்த்தரைக் கனம் பண்ணு. அப்பொழுது உன் களஞ்சியங்கள் பூரணமாய் நிரம்பும்; உன் ஆலைகளில் திராட்சைரசம் புரண்டோடும்" என்று வேதம் சொல்லுகிறது. (நீதி 3:9-10).
கர்த்தரை கனம் பண்ணுவதோடு, உண்மையாக உழைத்து சம்பாதிக்கும் பணத்தால் மட்டுமே மனஅமைதி, நிம்மதி, சமாதானத்தைப் பெற்றுத் தர முடியும்.
Comments
Post a Comment